;
Athirady Tamil News

ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு குழந்தைகள், பெண்கள் பேரணி !!

0

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய நெருப்புத் திருவிழாவில் இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் 1803 முதல் 1815-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நாளை ஒவ்வொரு ஆண்டும் நெருப்பு திருவிழாவாக அம்மக்கள் கொண்டாடி வருகின்றன.

142 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க நெருப்பு திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் பாலின கட்டுப்பாடுகளை தளர்ந்தும் விதமாக இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்றனர்.

போர் வீரர் போன்ற உடை அணிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். ஜியனிக் வானவேடிக்கை காட்சிப்படுத்துதல், பெரிய நெருப்புத் தூண்கள், டார்ட்லைட் அணிவகுப்புக்கள் மற்றும் எரிமலைகளின் முகத்திலிருந்த பயமின்மை காட்சிகள் ஆகியவை இங்கிலாந்தின் தீ திருவிழாவின் பருவத்தின் அனைத்து பகுதிகளாகும். பின்னர், டிராகன் வடிவ படகை தீ வைத்து எரித்து நெருப்பு திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.