;
Athirady Tamil News

குடும்ப தகராறில் விபரீதம்- நடுரோட்டில் லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன் !!

0

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், முத்தலூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மஹபூப் பாஷா (வயது 52). லாரி டிரைவர். இவர் தாடி பள்ளியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லூர் நோக்கி லாரியில் வந்து கொண்டு இருந்தார். இவருடன் மாற்று டிரைவரான ஓபைய்யா இருந்தார். ஸ்ரீராமலு மாவட்டம், மரிப்பாடு, ராஜி பாலம் அருகே லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த மஹபூப் பாஷாவின் மகன் ஷபி என்பவர் லாரியை நிறுத்தி தன்னுடைய தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார். இதனைக் கண்ட மாற்று டிரைவர் ஓபைய்யா லாரியில் இருந்து இறங்கி சென்றார்.

மீண்டும் தந்தை மகனிடம் தகராறு முற்றியதால் மெகபூபாஷா லாரியிலிருந்து கீழே இறங்கி சென்றார். அப்போது ஷபி லாரியை ஓட்டிச் சென்று முன்னே சென்று கொண்டு இருந்த தந்தையின் மீது ஏற்றி கொலை செய்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்குள் லாரியில் இருந்து கீழே குதித்த ஷபி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஹபூப் பாஷாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் தந்தையை மகன் லாரி ஏற்றிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.