;
Athirady Tamil News

குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்!!

0

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கே பாதுகாப்பில்லை எனக்கூறி பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் ஆவர். குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதி, போலீஸ் சீருடையில் மசூதிக்குள் புகுந்து தொழுகை நடந்து கொண்டிருந்த போது தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி, பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘எங்களின் கைகளை பாகிஸ்தான் அரசு கட்டிப்போட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லாதபோது, நாட்டில் யார் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்று கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.