;
Athirady Tamil News

அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் !!

0

கடினமான சூழ்நிலையில் பொருளாதார நிலைமையை நிர்வகிக்கும் நேரத்தில் தேர்தலுக்கு நிதி வழங்குமாறு திறைசேரி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை பல்வேறு பிரிவினரும் நிறுத்த வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற அழுத்தங்களைக் கொண்டுவரும் பல்வேறு பிரினரும் சம்பளம், ஓய்வூதியம், சமூகப் பலன்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு அரசாங்கம் நிதி திரட்டுவதில் உள்ள சிரமங்களை உணர வேண்டும் என்றார்.

செலவினங்களைக் குறைத்து, கிடைக்கும் நிதியை நிர்வகிப்பதுடன், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் தற்போதைய நிலைமையை சமாளிக்காவிட்டால் மீண்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சர்வதேசத்தின் உதவிகள் வந்துகொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.