;
Athirady Tamil News

பாரத் ரக்க்ஷா மன்ச் சார்பில் அன்னதானம்!!

0

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வள்ளலாருக்கு பாரத ரக்க்ஷா மன்ச்சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிள்ளையார்குப்பம், கன்னியகோவில், முள்ளோடை பகுதியில் நடந்தது. 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ருத்ரமூர்த்தி தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் குமாரசாமி, வக்கீல். தர்மலிங்கம், துணை செயலாளர் ஆறுமுகம், இவாமென்ஸ் தலைவர் குமரேசன், சரவணன், ஊடக தலைவர் சிவா மற்றும் பாகூர் பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.