;
Athirady Tamil News

சுறா கடித்து சிறுமி பலி!!

0

ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் ஸ்வான் என்கிற மிகப்பெரிய ஆற்றில் டால்பின்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இங்கு ஜெட் ஸ்கை என்று அழைக்கப்படும் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமாகும். இந்நிலையில் பெர்த் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் ஜெட் ஸ்கை சவாரியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆற்றில் கூட்டமாக டால்பின்களை பார்த்த உற்சாகத்தில் குதித்து நீந்த முயன்றார்.

எதிர்பாராத விதமாக சுறா ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுந்து சென்று கொடூரமாக கடித்து குதறியது. இறுதியாக சுறா சிறுமியை விடுவித்துவிட்டு தண்ணீருக்குள் சென்றது. பின்னர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.