;
Athirady Tamil News

புறக்கோட்டையில் ஒன்று கூடிய தொழிற்சங்கங்கள்! – குவிக்கப்படும் இராணுவம் !! (வீடியோ)

0

தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஓல்கோட் மாவத்தையின் ஒரு மருங்கு வீதியும் மூடப்பட்டுள்ளது.

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்தே கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியை காவல்துறையினர் மூடியுள்ளனர்.

இதற்கமைய தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

இதனால், சுற்றுவட்டார சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேவேளை, பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பல இராணுவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

வீதியில் எரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்ட பிரதி – கொழும்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போராட்டம்! (வீடியோ)

கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!!

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!

ஹூ சத்தம் எழுப்பியவாறு எதிரணி வெளிநடப்பட்டு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.