;
Athirady Tamil News

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட் ஆன்லைனில் இன்றும் நாளையும் முன்பதிவு!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய் நிகர் அடிப்படையில் கலந்து கொள்ள தேவையான டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

மெய்நிகர் அடிப்படையிலான கட்டண சேவைகளில் பங்குபெறும் பக்தர்களுக்கு மற்றொரு நாளில் ஏழுமலையானை நேரடியாக தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதேபோல் இம்மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகளில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் 10 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான வெப் சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்த பக்தர்கரின் பெயர்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் இம்மாதம் 22 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்க இருக்கும் கட்டண சேவைகளில் நேரடியாக பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று பகல் 12 மணி முதல் தேவையான டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.