;
Athirady Tamil News

மாவட்ட செயலக சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

0

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் பிரிவினால் நாடாத்தப் படும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (22.02.2023) அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உற்பத்தித்திறன் பிரிவினால் நாடாத்தப் படும் சிறந்த உத்தியோகத்தருக்கான
புரட்டாதி மாதத்திற்கான தெரிவில் சமுர்த்திக் கிளையின் முகாமையாளர் ஆர்.உதயகுமார் மற்றும் தாபனக்கிளையின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் எல்.சாந்தினி ஆகியோரும் ஐப்பசி மாதத்திற்கான தெரிவில் திட்டமிடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் பி.கமலதாசன் அவர்களும் கார்த்திகை மாதத்திற்கான தெரிவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ரி. தங்கேஸ்வரன் ஆகியோரும் சிறந்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.