;
Athirady Tamil News

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்!!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதி இன்று (03) அறிவிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பின்னர், பல முறை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தனர்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு வந்துள்ள நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதியை இன்று அறிவிக்கவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் கமிஷன் உறுப்பினர்கள் இன்று காலை கூடி தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆலோசித்து, பிற்பகலில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.