;
Athirady Tamil News

சாதகமாக அமைந்துள்ள ஐ.எம்.எஃப் உதவி – அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்பில் அறிவிப்பு!

0

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சவார்த்தைகள் சாதகமாக உள்ளதாகவும் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை முழுமையாக வரவேற்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு குறித்து கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும்,

“சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளோம்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையுமே தவிர குறைவடையாது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.