;
Athirady Tamil News

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!!

0

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்துவதும், அவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி அவமதிப்பு செய்துள்ளனர்.

பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவிலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கோவில் காம்பவுண்டு சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களில் 4 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா வந்தபோது, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்கை சந்தித்தார். அப்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து பேசினார். இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.