;
Athirady Tamil News

சால்வை போட்டு அவமானப்படுத்தியதை தட்டிக்கேட்டவர் மீது நாயை கடிக்க வைத்து கொலை மிரட்டல்- தி.மு.க. பிரமுகர் கைது!!

0

வில்லியனூர் கணுவாய்பேட்டை 2-வது வன்னியர் தெருவை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் (வயது39). இவரது உறவினரான சம்பத் என்பவர் பா.ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இவரது தந்தை சபாபதி முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஆவார். சம்பவத்தன்று சபாபதி வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்றார்.

அப்போது தி.மு.க. நிர்வாகியான வில்லியனூரை சேர்ந்த பூக்கடை சண்முகம் சபாபதிக்கு சால்வை அணிவித்ததாக கூறபடுகிறது. மேலும் சால்வை போடும் போட்டாவை சமூக வலைதளங்களிலும் பூக்கடை சண்முகம் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனை கண்ட சம்பத் தனது தந்தையை பூக்கடை சண்முகம் அவமானப்படுத்தி விட்டதாக கருதினார்.

இதனால் ஆத்திரமடைந்த சம்பத் இதனை தட்டிக்கேட்க செங்கதிர்செல்வனும் பூக்கடை சண்முகம் வீட்டுக்கு சென்றார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் பூக்கடை சண்முகத்துக்கும், சம்பத்துக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில் பூக்கடை சண்முகம் தனது வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டு செங்கதிர்செல்வனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போய் செங்கதிர்செல்வன் கீழே விழுந்தார்.

அப்போது செங்கதிர் செல்வனையும், சம்பத்தையும் கொலை செய்து விடுவதாக பூக்கடை சண்முகம் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து செங்கதிர் செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பூக்கடை சண்முகத்தை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.