;
Athirady Tamil News

மகனை கத்தியால் வெட்டிய தந்தை !!

0

பசறை – கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட்டிய தந்தை ஒருவர் இன்று (9) கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை – கோனகெலே வத்தை, ரெண்டபொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தையால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த மகன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.