;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு- மேலும் 456 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 400-ஐ தாண்டியது. அதாவது ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 456 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 93, கேரளாவில் 88, கர்நாடகாவில் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 89 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 343 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரத்து 782 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3,406 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 112 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத்தில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,780 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.