;
Athirady Tamil News

உக்ரைனின் பாக்முட் நகரில் முன்னேறும் ரஷ்ய படைகள்: இங்கிலாந்து திடீர் எச்சரிக்கை!!

0

கிழக்கு உக்ரைனின் பக்முட் நகரில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருகிறது. அதற்கு இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் எல்லை நகரமான பாக்முட் நகரம் தற்போது ரஷ்ய படைகளின் வசம் வந்துள்ளது. பாக்முட் நகரை கைப்பற்றி விட்டால் கிழக்கு உக்ரைனின் மற்ற நகரங்களுக்குள் ரஷ்ய படைகள் எளிதாக நுழைந்து விட முடியும்.

இந்நிலையில், பாக்முட் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. வடமேற்கு பாக்முட்டில் உள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட உலோகப் பதப்படுத்தும் ஆலைக்குள் ரஷ்ய படைகள் முன்னேறி சென்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன இதனை பயன்படுத்தி உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தினால் ரஷ்ய துருப்புகளின் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.