;
Athirady Tamil News

திருப்பதி அருகே கார்-லாரி மோதல்: சென்னை பக்தர்கள் 3 பேர் பலி!!

0

சென்னையில் இருந்து பக்தர்கள் காரில் திருப்பதிக்கு சென்றனர். நகரி அருகே தர்மபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பதியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நகரி நோக்கி வந்தது. தர்மபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நகரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பொதுமக்களும், போலீசாரும் சேர்ந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.