;
Athirady Tamil News

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது!!

0

பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில், மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இரண்டாவது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும் மற்றும் அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விற்கு முன்னதாக, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், சபையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.