;
Athirady Tamil News

ஆஸ்பத்திரியில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு!!

0

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஆத்ம குருநல்வகல்வா பகுதியை சேர்ந்தவர் அலியா (வயது 35). ஆத்ம குருவில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு உதவியாக 30 வயது இளம்பெண் ஒருவர் இருந்தார். ஆஸ்பத்திரியில் உள்ள குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது குளியல் அறையின் சுவற்றில் ஏறிய அலியா இளம்பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். வாலிபர் ஒருவர் தான் குளிப்பதை வீடியோ எடுப்பதை கண்ட இளம்பெண் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.

இளம்பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் ஓடி வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். தான் குளிப்பதை வாலிபர் வீடியோ எடுத்ததாக இளம்பெண் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த அலியாவை பிடித்து சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். பின்னர் அலியாவை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அலியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.