;
Athirady Tamil News

பெங்களூரு ரெயில் நிலையத்தில் பீப்பாயில் இளம்பெண் பிணம்!!

0

பெங்களூரு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் இருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார், பீப்பாயை திறந்து பார்த்தனர். அப்போது அதில் கவரில் சுத்தப்பட்டு ஒரு பெண்ணின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த பெண்ணை யாரோ மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு, உடலை பீப்பாயில் அடைத்து ரெயில் நிலையத்தில் போட்டுச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரெயில் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது ரெயில் நிலையத்துக்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், பீப்பாயை இறக்கி வைத்து விட்டு மின்னல் வேகத்தில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து, அந்த ஆட்டோவின் பதிவெண் மூலமாக மர்மநபர்களை தேடும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அதே நேரத்தில் அந்த பெண்ணை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவரது புகைப்படத்தை மாநிலத்தின் பிற போலீஸ் நிலையங்களுக்கும், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.