;
Athirady Tamil News

இறுதி சடங்கில் மது குடித்து தகராறு- தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை!!

0

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). இவரது மகன் பாலாஜி (24). அதே பகுதியை சேர்ந்த கனகராஜின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கனகராஜ் மற்றும் அவரது மகன் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் மது குடித்து இறுதி சடங்கில் பங்கேற்றனர். மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். தந்தையும், மகனும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கனகராஜின் மனைவி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் விரக்தி அடைந்த தந்தையும், மகனும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளுபடி மயங்கி விழுந்தனர். இருவரையும் மீட்ட அவரது உறவினர்கள் குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜியும் கனகராஜும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.