;
Athirady Tamil News

கல்வி அமைச்சரின் முக்கிய அறிவித்தல் !!

0

எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் ஆங்கில பேச்சு மொழியை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தரம் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.