;
Athirady Tamil News

ஒட்டிசுட்டானில் அரைக்கும் ஆலையை சேதப்படுத்திய யானை!!

0

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மான்னுருவி பகுதியில் உள்ள அரைக்கும் ஆலைக்குள் யானை புகுந்து துவம்சம் செய்துள்ளது.

அரைக்கும் ஆலைக்குள் நேற்று (19) இரவு புகுந்த காட்டுயானை ஒருபகுதி சுவரினை உடைத்து வீழ்ந்தியுள்ளதுடன் அரைக்கும் இயந்திரங்களை சேதப்படுத்தியுள்ளது.

சுமார் 5 இலட்சம் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.