;
Athirady Tamil News

ஏப்ரல் 8-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!

0

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் இரண்டாவது ரெயில் ஆகும். அத்துடன் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.