;
Athirady Tamil News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு புதிய சிக்கல்!!

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கும் போது பணியகத்திற்கு வழங்கப்படும் வங்கி உத்தரவாதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த தொகையினை 750,000.00 ரூபாவிலிருந்து 3 மில்லியனாக அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வருடத்தில் இறுதியில் அதனை 5 மில்லியனாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முகவர் நிலையங்களின் சேவை ஒப்பந்தங்களுடன் பணிபுரிய வெளிநாடு செல்லும் மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் அதற்கான நிதி பலம் கொண்ட நிறுவனங்களை உருவாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.