;
Athirady Tamil News

தெலுங்கானா-மகாராஷ்டிரா மாநில எல்லையில் கிராம பகுதியில் புகுந்த அபூர்வ வெள்ளை நிற நாகப்பாம்பு!!

0

தெலுங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபால பள்ளி மாவட்ட எல்லையான மகாராஷ்டிரா மாநிலம் கட்சி ரோலி மாவட்டம் சரோஞ்சாவில் உள்ள தானிய ஆலையில் நேற்று காலை வெள்ளை நிறத்திலான அபூர்வ வகை நாகப்பாம்பு ஒன்று சுற்றி கொண்டு இருந்தது. இதனை கண்ட தானிய ஆலை ஊழியர்கள் அபூர்வ வகை பாம்பை அதிசயத்துடன் பார்த்தனர். அப்போது பாம்பு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.

கிராம மக்கள் திரளானோர் வந்து வெள்ளை நிற பாம்பை பார்த்தனர். மேலும் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்து அரிய வகை வெள்ளை நிற நாக பாம்பை பிடித்தார். பின்னர் அதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.