;
Athirady Tamil News

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த வீடுகளிலேயே தனியார் மது பார் நடத்த அனுமதி- அரசு அறிவிப்பு!!

0

இந்தியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கம். தற்போது சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு மாற்றாக ஹோம் ஸ்டே தங்கும் வசதிகள் அதிகரித்து வருகிறது. இது சுற்றுலா தலங்களில் வசிப்போர் தங்கள் வீடுகளில் சுற்றுலா பயணிகள் தங்க ஒன்று அல்லது 2 அறைகளை ஒதுக்கி கொடுத்து அங்கே அவர்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கி செல்ல அனுமதிப்பார்கள். இதற்காக விருந்தினர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையையும் பெற்று கொள்வார்கள். இது லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. வீடுகளில் நடத்தப்படும் பார்களில் 60 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பானங்கள் வைத்து கொள்ளலாம். 9 லிட்டர் அளவுக்கு பீர் பாட்டில் வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த லைசென்ஸ் பெறுவோர் வருமான வரி கட்டுவோராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மாநில கலால் துறைக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.

இது தவிர வீடுகளில் நடைபெறும் தனியார் மதுபார்களில் 21 வயதுக்கு குறைந்தோருக்கு எக்காரணம் கொண்டும் மதுபானம் வழங்க கூடாது. மிலிட்ரி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. ஒரு பாக்ஸ் ஒயின் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. மலைப்பாங்கான இந்த மாநிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.