;
Athirady Tamil News

தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணியான பூனையை கணவன் காப்பகத்தில் விட்டால் விவாகரத்து நோட்டீஸ்!!

0

தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணியான பூனையை கணவன் காப்பகத்தில் விட்டால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம் ஒரு பெண் தினுசு தினுசான காரணங்களை முன்வைத்து விவாகரத்து கேட்பது உலகம் முழுவதும் நடைப்பெற்று வருகின்றது.

அப்படி ஒன்றுதான் இங்கும் நடந்துள்ளது, என்னவெனில் மனைவி ஆசையாக வளர்த்த பூனையை கணவர் காப்பகத்தில் விட்டிருக்கிறார், இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிருக்கிறார்.

இது தொடர்பாக லண்டனை சேர்ந்த பிரபல செய்திதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தான் வளர்க்கும் அந்த பூனை தன்னுடைய தந்தையின் மறுபிறவி என தான் கருதி வந்த நிலையில், அதை தான் கணவர் காப்பகத்தில் விட்டுவிட்டார் என அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள விரக்தியினால் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டு இருக்கின்றார். இது தொடர்பாக அப்பெண் பேசியதாக சொல்லப்படும் பதிவில் பூனை குழந்தையாக இருக்கும் பொது மீட்டெடுதேன் அப்போது என்னுடையே உள்ளங்கையில் தவளத்தொடங்கிவிட்டன்.

இரண்டாண்டுகளாக என்னுடன் இருந்தான் நான் இதை சொல்லும்போது பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம் ஆனால் என் தந்தையின் மறுபிறவியாகவே பூனையை நினைத்திருந்தேன் அவன் கண்களை பார்கும் போதெல்லாம் பூனை என்பதை தண்டி வேறொரு நல்லுணர்வு என்னுள் ஏற்படும் ஆனால் என் கணவருக்கு இது விசித்திரமானதாகவும் ஆரோகியமற்றதாகவும் தெரிந்துள்ளது.

குறிப்பாக என் தந்தையின் ஆன்மா பூனைக்குள் இருப்பதாக நான் நம்புவது கணவருக்கு பயத்தை ஏற்படுத்திருக்கிறது மேலும் இந்த நிலையில் என் அம்மா மற்றும் சகோதரியுடன் விடுமுறை காலத்தை கழிப்பதற்காக சுற்றுலா சென்றிருந்தேன். அது முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்த பொதுதான் என்னுடைய பூனை இல்லாமல் போனது தெரியவந்தது.

இதை பற்றி கணவரிடம் கேட்டபோது பூனையை தன்னுடைய சகஊழியரிடம் கொடுத்து விட்டேன் என்றுள்ளர். இதனை அடுத்து அந்த நபரிடம் பூனையை திருப்பி கேட்டபோது பூனையை கொடுக்க மறுத்துவிட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.

பூனையை திருப்பி வாங்க முடியாததால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார். குறிப்பாக, தன்னை விட்டு பிரிந்திருக்கும் பூனை பென்ஜி எப்படி புது இடத்தில் வாழும் என்ற நினைப்பால் வேதனையில் இருந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் பூனையை திரும்ப பெற போலீசிடம் புகார் கொடுத்ததோடு, அதனை வாங்கியவரின் மனைவியிடம் விசாரித்திருக்கிறார். ஆனாலும் அவரும் இதுகுறித்து எந்த தகவலும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து கணவரிடம் போலீஸ் தீர விசாரித்தபோது பூனை பென்ஜியை தனது சக ஊழியரிடம் கொடுக்காமல் காப்பகத்தில் விட்டதை சொல்லியிருக்கிறார் அவர். இதன் பிறகே அந்த மனைவி விவாகரத்து நோட்டீஸ் விடுத்திருப்பதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.