;
Athirady Tamil News

வேலணை கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு போட்டி!! ( படங்கள் இணைப்பு )

0

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி 26. 04. 2023 அன்று புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது .
இப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு. கா. சசிதரன் அவர்களின் தலைமையில் 27 – 04 – 2023 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன .

பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு . தி. ஞானசுந்தரன் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக திரு . சி. சபா ஆனந் ( யாழ் பல்கலைக்கழகம் உடற்கல்வி விஞ்ஞான அலகு தலைவர் / சிரேஷ்ட விரிவுரையாளர் ) மற்றும் திரு. பொன் சகிலன் ( உதவிக் கல்விப் பணிப்பாளர் , உடற்கல்வி தீவகக் கல்வி வலயம் ) அவர்களும்

கௌரவ விருந்தினர்களாக சூழகம் அமைப்பின் செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் மற்றும் திரு. கருணாகரன் குணாளன் ( செயலாளர் , புங்குடுதீவு உலக மையம் ) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் . 1991 க்கு பின்னர் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கோட்ட மட்ட போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.