;
Athirady Tamil News

உக்ரைனின் அதிபர் கைது என்ற செய்தியை கற்பனை செய்ய முடியுமா – ஜெலன்ஸ்கி பகிரங்கம் !!

0

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது நீண்டு கொண்டே செல்கிறது.

2 நாட்களுக்கு முன் ரஷ்யாவின் படையினர் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலால் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால், உக்ரைனுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர், நடந்த இந்த பெரிய தாக்குதலால் உக்ரைன் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருக்கிறார்.

இதுபற்றி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, கைத்துப்பாக்கியை வைத்து எப்படி சுட வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும்.

உக்ரைனின் அதிபர் ரஷ்யர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தலைப்பு செய்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

ரஷ்யர்களிடம் சிறை பிடிக்கப்பட்டால், அது அவமதிப்பு ஆகும் என்று அவர் உறுதிப்பட கூறினார்.

போரின் தொடக்கத்தில் ரஷ்ய உளவு பிரிவினர் கீவ் நகரை தாக்க முயற்சித்தனர். எனினும், உக்ரைன் படைகள் அதனை முறியடித்தன.

இதனால், பங்கோவா தெருவுக்குள்ளேயே ரஷ்ய படைகளால் நுழைய முடியவில்லை.” என அவர் கூறியுள்ளார்.

இந்த பகுதியிலேயே அதிபர் அலுவலகங்கள் உள்ளன. பல்வேறு தாக்குதல் நடந்த, கீவுக்குள் நுழைவதற்கான பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, அவர்கள் உள்ளே நுழைந்து விட்டால், நிர்வாகம் அவர்களால் கைப்பற்றப்பட்டால், நாங்கள் இப்போது இங்கிருக்க முடியாது.

ஆனால், ஒருவரையும் அவர்கள் சிறை பிடிக்க முடியாது. அந்தளவுக்கு படையினர் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிவரையிலான போரை நாங்கள் நடத்துவோம். என கூறியுள்ளார்.

ரஷ்ய படைகளிடம் சிறை பிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்து கொள்வீர்களா? என்ற கேள்வியை அவர் நிராகரித்து உள்ளார்.

இல்லை. இல்லை. நான் துப்பாக்கியால் என்னை சுட்டு கொள்ளமாட்டேன். திருப்பி சுடுவேன். அது நிச்சயம் என்று அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.