;
Athirady Tamil News

இன்று (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைப்பு!!

0

இன்று (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாயினால் குறைக்கப்படுகிறது. புதிய விலை 333 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்ரைன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 310 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 330 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.