;
Athirady Tamil News

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு விஜயம்!!

0

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு இன்று (30) விஜயம் செய்தனர்.

வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து (28) ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், விக்கிரங்கள் வைப்பு செய்யப்பட்டமை மற்றும் ஆலயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் பார்வையிடுவதற்காக குறித்த வழக்கில் ஆலயம் சார்பிலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சார்பிலும் மன்றில் ஆஜராகி வாதப் பிரதி வாதங்களை முன்வைத்த சட்டத்தரணிகள் குழு விஜயம் செய்திருந்தனர்.

இதில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வவுனியாவின் சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள், சட்டத்தரணிகளான திலீப் காந்தன், கீர்த்தனன், இளஞ்செழியன், திபின்சன் உள்ளிட்ட சட்டரத்தரணி குழுவினர் சென்றிருந்தனர். இவர்களுடன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சீ.வீ.கே.சிவஞானம், ஜி.ரி.லிங்கநாதன், சுகிர்தன், கேசவன் சயந்தன், ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறிமலை விவகாரம்: விக்கிரகங்களை வைக்க நீதிமன்றம் உத்தரவு !!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய புனித சின்னங்கள் சிதைக்கப்பட்டமைக்காக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம்!!

இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது – டக்ளஸ்!!

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம்!! (PHOTOS)

இன அழிப்பின் தொடர்ச்சியே வெடுக்குநாரி மலை பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலத்தின் சிதைப்பு – மணிவண்ணன்!!

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு!! (PHOTOS)

வெடுக்குநாறியில் அட்டகாசம்: ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளது !!

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து சைவ அமைப்பினர் யாழில் போராட்டம்!! (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.