;
Athirady Tamil News

வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு- ஜன்னல் கண்ணாடியில் விரிசல்!!

0

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் ஒரு பெட்டியில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் விரிசல் இருந்தது தெரியவந்தது.

இதனை பயணி ஒருவர் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார். யாரோ மர்ம நபர் ரெயில் மீது கல்வீசியிருப்பது தெரியவந்தது. அந்த நபர் யார்? எதற்காக கல்வீசினார்? என்பது பற்றி ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசும் சம்பவங்கள் தெலுங்கானா, மேற்கு வங்காளம், பீகார், உத்திர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் நடந்துள்ளது. இப்போது கேரளாவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.