;
Athirady Tamil News

இரு தளபதிகளையும் சந்தித்தார் சௌத்ரி !!

0

இந்திய விமானப்படையின் படைப்பிரதானி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மற்றும் இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரை, செவ்வாய்க்கிழமை (02) சந்தித்தார்.

கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோவினால் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு விமானப்படையின் வண்ணப் படையணியினால் கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதேவேளை, கடற்படைத் தலைமையகத்தின் நுழைவாயில்களில் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்கப்பட்ட இந்திய விமானப்படையின் படைப்பிரதானிக்கு கடற்படையின் முகாமைத்துவ சபையை கடற்படைத் தளபதி அறிமுகப்படுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.