;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 3,611 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,962 ஆக இருந்த நிலையில் இன்று 3,611 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 49 லட்சத்து 64 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,587 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 99 ஆயிரத்து 415 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 33,232 ஆக குறைந்துள்ளது. இது நேற்றைவிட, 3,012 குறைவாகும். தொற்று பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 16 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 27 பேரும், கேரளாவில் விடுபட்ட 9 மரணங்கள் என மேலும் 36 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.