;
Athirady Tamil News

உக்ரைன் போரில் மேலும் ஒரு பத்திரிகையாளர் பலி !!

0

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புதின் மக்களுக்கு உரையாற்றினார்.

இதையடுத்து, பல மாதங்களுக்குபின், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முத் நகரில் ரஷியப்படைகள் கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் அர்மன் சோல்டின் (22), என்ற பிரான்ஸ் பத்திரிகையாளர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் போர் தொடங்கியது முதல் இதுவரை 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.