;
Athirady Tamil News

வலுக்கும் உக்ரைன் போர் – கடும் எதிர்ப்பையும் மீறி முன்னேறும் உக்ரைன்படை !!

0

உக்ரைனியப் படைகள் “கடுமையான எதிர்ப்பை” மீறி பாக்முட்டைச் சுற்றியுள்ள பக்கவாட்டில் முன்னேறி ரஷ்ய வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பில் உக்ரைனின் (கிழக்கு) படைகளின் செய்தித் தொடர்பாளர் Serhii Cherevatyi, கடந்த இரண்டு நாட்களில், உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் Bakhmut ஐச் சுற்றியுள்ள பகுதிகளில் 350 மீட்டர் முதல் 2 கிலோமீட்டர் வரை முன்னேறியுள்ளதாக தெரிவித்தார்.

“எதிரி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றபோதிலும் இன்று முழுவதும், பக்முட் போர்முனையில் 34 மோதல்கள் நடந்தன, மேலும் எதிரிப் படைகள் பல்வேறு வகையான பீரங்கிகளையும் மற்ற ஆயுத அமைப்புகளையும் [உக்ரைனிய] நிலைகளைத் தாக்க 479 முறை நிலைநிறுத்தியது. நான்கு [ரஷ்ய] வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

எனினும் எங்கள் வீரர்கள் போரில் 149 பேரைக் கொல்லவும், 160 ரஷ்ய வீரர்களை காயப்படுத்தவும், ஆறு கைதிகளைப் பிடிக்கவும் முடிந்தது.”என குறிப்பிட்டார்.

உக்ரைனியப் படைகள் இரண்டு ரஷ்ய காலாட்படை சண்டை வாகனங்கள், இரண்டு கவச வாகனங்கள் மற்றும் மூன்று யுஏவிகளை சேதப்படுத்தியதாகவும், ரஷ்ய வெடிமருந்துக் கிடங்கைத் தாக்கியதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.