;
Athirady Tamil News

ஷானியின் பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு!!

0

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

ஷானி அபேசேகர தம்மைப் பாதுகாப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு இன்று (18) அழைக்கப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இந்த அறிவித்தலை விடுத்தார்.

ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக அதிகாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.