;
Athirady Tamil News

சீனா- வியட்நாம் எல்லையில் வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் உயிரிழப்பு!!

0

சீனா-வியட்நாம் எல்லையில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது வியட்நாம் குடிமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் குவாங்சி ஜூவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் சீனாவை சேர்ந்த ஓட்டுனர், உதவியாளர், இரண்டு வியட்நாம் பிரஜைகள் ஆவர். சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.