;
Athirady Tamil News

அமெரிக்காவின் பார்வைக்குள் சிக்கிய வாக்னர் படை..!

0

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையானது உக்ரைனில் நடந்த போரில் பயன்படுத்துவதற்காக சர்வதேச அளவில் இராணுவ உபகரணங்களைப் பெறுவதற்கான மேற்கொண்ட முயற்சிகளை, மறைக்க முயற்சித்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மற்றும் மாலி வழியாக அத்தகைய பொருட்களை பெற்றுக்கொள்ள முயல்கிறது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“உக்ரேனில் ரஷ்ய துருப்புக்களுடன் இணைந்து போராடும் தனியார் கூலிப்படை, மாலி வழியாக இராணுவ உபகரணங்களை அனுப்ப தவறான ஆவணங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளது.” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வாக்னர் படை மாலி வழியாக ரஷ்யாவின் போருக்கு உதவுவதற்காக பொருள் கையகப்படுத்தல்களை அனுப்ப முயல்கின்றனர் என்றும், இந்த பரிவர்த்தனைகளுக்கு தவறான ஆவணங்களைப் பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், வாக்னர் வெளிநாட்டு வழங்குநர்களிடம் இருந்து இராணுவ உதவிகளை வாங்குவதற்கு முயற்சித்து வருகிறார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

மேலும் இந்த ஆயுதங்களை மூன்றாம் தரப்பாக மாலி வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கையகப்படுத்துதல்கள் தொடர்பிலான எந்த அறிகுறிகளையும் நாங்கள் இதுவரை காணவில்லை.

ஆனால் நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். வாக்னரின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிப்பதாக கண்டறியப்பட்டபல கண்டங்களில் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

மேலும், மாலி வழியாக உபகரணங்களை அனுப்பும் முயற்சி குறித்து அமெரிக்கா விரைவில் கூற வேண்டும்.

புர்கினா பாசோவில் ரஷ்யாவின் வாக்னர் பற்றிய கவலையை அமெரிக்க ஆவணங்கள் எழுப்புகின்றன. இந்த மாத தொடக்கத்தில், வாக்னர் கூலிப்படையை ஒரு “பயங்கரவாத குழு” என்று முறையாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம்ஏற்றுக்கொண்டது.

ஜனவரி மாதம் வாக்னரை “நாடுகடந்த குற்றவியல் அமைப்பு” என்று அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.