;
Athirady Tamil News

சிட்னியில் பயங்கர தீ விபத்து.. இடிந்து விழுந்த கட்டிடம்!!

0

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் சாய்ந்து கீழே தெருவில் சிதறியது. தரையில் நின்றிருந்த ஒரு வாகனம் தீயில் கருகியது.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடிவருகின்றனர். தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.