;
Athirady Tamil News

தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை தேடும் செயலாளர்!!

0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை (25) அறிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கனிக்ஷிகா டி சில்வா மேற்கண்டவாறு மன்றுக்கு ​அறிவித்தார்.

தோட்டத்தொழிலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு​, உயர்நீதிமன்றத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, மூர்து பெர்ணான்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகி​ய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வியாழக்கிழமை (25) ஆராயப்பட்டது.

இந்த மனுவில், ​பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.