;
Athirady Tamil News

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மரம் விழுந்து மகள் கண் முன்னே டாக்டர் பலி !!

0

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குரப்பா (வயது 72). இவர் கடப்பாவில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பயின்று வந்தார். இவரது மகள் ரவளி. லவ்லி திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் குரப்பா கடப்பாவில் இருந்து மகளை பார்ப்பதற்காக நேற்று காலை திருப்பதி வந்தார். திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு தனது மகளுடன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது மகளுடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார். அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கோவில் வளாகத்தை சுற்றி வந்த பக்தர்கள் அங்குள்ள அரசமரத்து அடியில் தஞ்சம் அடைந்தனர்.

அப்போது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசமரம் திடீரென இரண்டாக பிளந்து விழுந்தது. மரத்தின் அடியில் குரப்பா மற்றும் 3 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் குரப்பாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மகள் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது மகள் கதறி துடித்தார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர், பேபி, நிஹாரிகா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிந்தராஜ சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர். பலத்த காற்று வீசியபோது கோவில் வளாகத்தில் யானை கொண்டு வரப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இல்லை எனில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். பலியான குரூப்பா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.