;
Athirady Tamil News

“மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும்” !!

0

இலங்கைத் தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் பல்வேறு பட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் இனஅழிப்பு நடவடிக்கையின் புதிய வடிவத்தையே காட்டிநிற்கின்றது

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை கொன்றொழித்து படுகொலைகளை செய்ய ஜேர் ஆர் ஜெயவர்தனவின் மருமகனான ரணில் அரசின் இந்த செயற்பாடானது இந்த நாட்டிலே அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது என்று தெரிவித்த அவர் இந்த நாட்டிலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலங்கை வருமானவரி திணைக்களத்திலே பதிவு செய்து தங்களுடைய உழைப்பு வருமானங்களுக்கு வருடாந்தம் வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.

ஒரு நாட்டிலே வரி அறவிடுவது என்பது மிக நல்ல விடயம். ஆனால், இலங்கையில் ஒரு நான்கு வயது தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை சுயமாக பாடசாலைக்கு சென்று கல்வி கற்க முடியாத அதாவது பருவ காலச் சீட்டை பெற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணம் செய்து தமது கல்வியை தொடர முடியாத நிலை ஒரு மாணவனின் கல்வி நடவடிக்கைகளில் ஒரு வசதியை செய்து கொடுக்காத இந்த அரசாங்கம் 18 வயதிற்குப் பின்னர் அவர்களிடமிருந்து வரியை அறவிடுவது என்பது இந்த நாட்டின் ஒரு மிக மோசமான நிலைமையை காட்டி நிற்கின்றது.

இந்த அரசாங்கத்தில் பலர் பல்வேறு பட்ட மோசடிகளை செய்து போயிருக்கின்றார்கள் இந்த அரசாங்கத்தினுடைய மத்திய வங்கியின் பல மில்லியன் கணக்கிலே இதே ரணில் அரசு இருக்கின்ற போது கொள்ளையடித்து சென்றவர்களை மத்திய வங்கி ஆளுநரைக் கூட இதுவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.

சீனியிலும் தேங்காய் எண்ணெயிலும் ஊழல் மோசடி செய்த ; கோத்தபாயவனுடைய குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்ய திராணியற்ற ரணில் அரசாங்கம் இங்கே பல ஊழல்களில் ஈடுபட்டு விடுதலைப் புலிகளிடமிரந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளிலே வைப்பிலிட்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரையும் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என்றார்.

இருபது தலைமுறைகளுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துவிட்டு இருக்கின்ற மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை விசாரிக்கவும் இந்த அரசாங்கம் இன்று தயாராக இல்லை ஆனால் இந்த இளைஞர்களில் மட்டும் அதிகரிச்சனை கொண்டிருக்கின்றது என்றார்.

கொள்ளையடித்தவர்கள் களவெடுத்தவர்களினுடைய பக்கத்தில் தான் இந்த நாடு எப்பொழுதும் நிற்கின்றது இந்த தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.