;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 30 மணி நேரமாகிறது!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 8 மணி நேரமும், நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 87,434 பேர் தரிசனம் செய்தனர். 39,957 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.