;
Athirady Tamil News

மின்சார சபையின் பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் யாழில் செயற்படும்!!

0

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை தொடக்கம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பணம் செலுத்தும் பகுதி திறந்து இருக்கும் என பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.