;
Athirady Tamil News

“விஜேராம வீட்டில் இருந்து செல்லுங்கள்”: என மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பாததன் காரணம் …..

0

கொழும்பு 07, விஜேராமவில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அறிவித்தால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் குழு தயாராக இருப்பதாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டிய அரசியலமைப்பு சலுகைகள் மற்றும் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என ஒரு பின்னணி உருவாகும் எனவும் , அரசாங்கமும் அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு , எழுத்துப்பூர்வமாக அறிவிக்காததற்கும் இதுவே காரணம் என்றும்ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி , விஜேராம வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அதிகாரப்பூர்வமாக கடித மூலம் அறிவிக்குமாறு தொடர்ந்து சவால் விடுப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் விஜேராம வீட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடந்த 3 ஆம் திகதி கொழும்பில் மீண்டும் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.