பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டம் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியினை ஆரம்பித்த மாணவர்கள் பாராளுமன்றத்தின் நுழைவுப் பகுதியான பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்பின்னர், அங்கு கூடாரங்களை அமைத்து மாணவர்கள் தங்கியிருந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர் அத்துடன் மாணவர்கள் காவல்துறையின் தடைகளை … Continue reading பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!