வடக்கு கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்கள் கே.கே.எஸ் கடற்படை முகாமில்!

யாழ்ப்பாண கடற்பகுதியில் பழுதடைந்த நிலையில் தத்தளித்த படகொன்றில் இருந்தவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மீன் பிடிக்க சென்று இருந்த மீனவர்கள், படகொன்று பழுதடைந்த நிலையில், கடலில் தத்தளித்தவாறு காணப்பட்டதை கண்ணுற்று அருகில் சென்று பார்த்த போது படகில் இருந்தவர்கள் தமது பிள்ளைகளை காண்பித்து உதவி கோரி அபய குரல் எழுப்பினர். உடனடியாக அது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவித்தனர். … Continue reading வடக்கு கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்கள் கே.கே.எஸ் கடற்படை முகாமில்!