;
Athirady Tamil News

புளொட் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, பிழைப்பு நடத்தும் “லண்டன் அடங்கா பிரதீபன்” என்பவரின் உண்மை முகம் என்ன?.. (படங்களுடன்)

0

புளொட் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, பிழைப்பு நடத்தும் “லண்டன் அடங்கா பிரதீபன்” என்பவரின் உண்மை முகம் என்ன?.. (படங்களுடன்)

தனது குடும்பம் இராணுவத்தால் அழிக்கப்பட்டதை காரணம் காட்டி வயிற்றுப் பிழைப்புக்காக (சோற்றுக்கு வழியில்லாமல்) புளொட் அமைப்பில் சிறுவயது முதல் தன்னை இணைத்துக் கொண்ட திருகோணமலையை வசிப்பிடமாகவும், நெடுந்தீவை பூர்வீமாகவும் லண்டனில் வாழ்விடமாகவும் கொண்ட “அடங்கா தமிழன்” எனும் அடைமொழியில் அழைக்கப்படும் தர்மராஜா பிரதீபன் என்பவனை புளொட் செயலதிபர் புளொட் அமைப்பில் இணைத்துக் கொண்டு “குடும்பத்தை இழந்தவன் எனும் பாவத்துக்கு இரங்கி” புளொட் அமைப்பின் பணத்திலேயே தன்னை வளர்த்துக் கொண்டு, புளொட் அமைப்பின் நிதியைக் கொள்ளை அடித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்தவன்,

சில வருடங்களுக்கு முன்னர் தனது பரம்பரைக் காணியை விற்பதாகக் கூறி லண்டனில் இருந்து இலங்கை சென்று வாழ்ந்த போது, இவரது மனைவி பிள்ளைகள் லண்டனில் வாழும் நிலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட புளொட் முக்கியஸ்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, அம்மாவட்டத்தில் உள்ள கணவனை இழந்த கைம்பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்குவதாகக் கூறி, அதாவது அப்பெண்ணின் “மிக்ஸர்” தொழிலுக்கு உதவி வழங்குவதாகப் பணம் வழங்கி, அப்பெண்ணை மயக்கி அப்பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி வவுனியாவுக்கு கொண்டு வந்து அப்பெண்ணுடன் வாழ்ந்து விட்டு, அப்பெண்ணை ஏமாற்றி விட்டு லண்டனுக்கு ஓடி விட்டார்.

இதேவேளை ஒரேநேரத்தில் தனது ஆரம்ப காதலியென மன்னாரில் வாழும் விதவைப் பெண்ணான இன்னுமொரு பெண்ணுடனும் தொடர்பேற்படுத்தி அவருடனும் மன்னாரில் சென்று குடும்பம் நடத்தி விட்டு, லண்டனுக்கு ஓடி சென்று விட்டாராம்.

இவர் புளொட் அமைப்பில் இருந்து எப்போதோ வெளியேற்றப்பட்டு விட்டாராம். அதன் காரணமாக புளொட் அமைப்புக் குறித்தும், புளொட் தலைவர் குறித்தும் மிகக் கேவலமான பதிவுகளை உண்மைக்குப் புறம்பாக சமூகவலைத் தளங்கள் ஊடாக பரப்பி வரும் இவர், இப்போது புங்குடுதீவு குறித்த பதிவுகளையும் தரக்குறைவாகப் பரப்பி வருகிறாராம்.

இதுகுறித்து “அதிரடி” இணையத்தின் தொடர்பாளரும், புளொட் அமைப்பின் மூத்த ஆரம்பகாலத் தோழரும், இப்போதும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருப்பவரும், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவருமான திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுடன் “அதிரடி” இணையம் சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது, “நீங்கள் சொன்ன அனைத்து விடயங்களும் உண்மை தான், சோற்றுக்கு வழியில்லாமல் எமது அமைப்பில் இணைந்த இவரைப் போன்ற சிலர் வேறுவழியில்லாமல், இதுபோன்ற சிலவற்றை சொல்வதையோ, எழுதுவதையோ நாம் பெரிதுபடுத்த மாட்டோம், ஏனெனில் இவர் புளொட்டின் ஒழுக்காற்று நடவடிக்கையால் 2017 ஆம் ஆண்டே புளொட் அமைப்பில் இருந்து வெளியேறியவர்” என தெரிவித்தார்.

இதேவேளை இவருக்கு உதவியாக செயல்படும் புளொட் அமைப்பில் உள்ள சிலர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் கொலை உட்பட சில விடயங்கள் குறித்தும் “அதிரடி” இணையம், திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் வினவிய போது, “சில விடயங்களை நாம் கதைப்பதோ, பெரிதுபடுத்துவதோ இப்போதைக்கு தேவைப்படாத விடயம் என நான் கருதுகிறேன், புங்குடுதீவு குறித்தோ, புளொட் குறித்தோ கதைக்கும் எந்தவொரு அருகதையும் இவருக்கு இல்லை, ஏனெனில் இவரது வாழ்க்கையே இவரது குடும்பத்தாலேயே அருவறுக்கத்தக்கது, சந்தர்ப்பம் ஏற்பட்டால் இவருக்கு உதவும் சிலரின் உண்மை முகங்களை வெளிக்கொணர்கிறேன்” என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக தீவகன்.

புளொட் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, பிழைப்பு நடத்தும் “லண்டன் அடங்கா பிரதீபன்” என்பவரின் உண்மை முகம் என்ன?.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.